நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையை அண்டிய பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அடுத்த 48 மணிநேரத்துக்குள் களனி கங்கையை அண்டிய பிரதேசங்களுக்கே வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, களனி கங்கையை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது
