பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களை இன்று ஜனாதிபதி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்,
குறுகிய கால அழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கலந்துகொள்ள மாட்டார் அறிவிக்கப்பட்டுள்ளது. - தனக்கு ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் பங்கெடுக்க முடியாது என தெரிவித்துள்ளதாக த.மு. கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் ரவுப் ஹக்கீம் தெரிவித்ததாக மனோ கணேசன் எம்.பி சற்று முன் ShortNews இடம் உறுதிப் படுத்தினார்.
