Our Feeds


Saturday, December 13, 2025

Zameera

விக்டோரியா நீர்த்தேக்கம் அருகே சட்டவிரோத 'ஃபேஸ்புக் விருந்து' சுற்றிவளைப்பு - 26 பேர் கைது


 தெல்தெனிய - விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற பேஸ்புக் விருந்துபசார நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், 22 ஆண் சந்தேகநபர்களும் 4 பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று, சனிக்கிழமை (13) அதிகாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

சந்தேகநபர்களிடமிருந்து,  4134 மில்லிகிராம் ஐஸ், 1875 மில்லிகிராம் ஹேஷ் ரக போதைப்பொருள், 2769 மில்லிகிராம் குஷ் ரக போதைப்பொருள், 390 மில்லிகிராம் கொக்கைன், 13 போதை மாத்திரைகள் மற்றும் 12 சட்டவிரோத சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொடகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த ஆண் சந்தேகநபர்கள் 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், பெண் சந்தேகநபர்கள் கண்டி, நீர்கொழும்பு மற்றும் புடலுஓயா பகுதிகளை சேர்ந்த 21 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (13) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

தெல்தெனிய பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »