Our Feeds


Friday, December 12, 2025

Zameera

றிஷாட் பதியுதீனால், கொழும்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்…!



றிஷாட் பதியுதீனால், கொழும்பில்  வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்…!

தித்வா சூறாவளிப் புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட  கொழும்பு, மட்டக்குளி மற்றும் வெள்ளம்பிட்டிய பிரதேசத்தின் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி நேற்று (11) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான றுஸ்டி ஹபீப், கொலன்னாவ பிரதேச அமைப்பாளர் றிஸ்மி
ஹனீபா, தெஹிவளை பிரதேச அமைப்பாளர் றிஸ்வான், கோட்டை பிரதேச அமைப்பாளர் அஸ்மி, கட்சியின் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மர்ஹூம் பாயிஸ் அவர்களின் அரசியல் செயயற்பாட்டாளர்கள், அலி, ஹஸன், றிஷாட், முஸம்மில், சேர்மின் உள்ளிட்டோருடன் ஊர் பிரமுகர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »