மேல், சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அபாயங்களைக் குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
