தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளுடன் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு திக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட படகில் ஐந்து பேர் இருந்துள்ளனர்.
கந்தர துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றதாகக் கூறப்படும் குறித்த படகில் இருந்து ஹெரோயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) அடங்கிய 11 பொதிகளை இலங்கை கடற்படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
