ஐந்து வருடங்களில் செய்ய வேண்டியதை முதல் வருடத்தில் செய்ய வேண்டும் என எவரும் எதிர்பார்க்க கூடாது என பிரதி அமைச்சர் நாமல் கருனாரத்ன குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்
“ஐந்து வருடங்களில் செய்ய வேண்டியதை முதல் வருடத்தில் செய்ய வேண்டும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம் அதை செய்ய முடியாது. நான்கு வருடங்களில் செய்ய வேண்டியதை இரண்டாம் வருடத்தில் எதிர்ப்பார்க்க வேண்டாம். கொடுத்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றுவோம். எமக்கு 5 வருடங்களுக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. தற்போது ஒரு வருடமே நிறைவடைந்துள்ளது.ஐந்து வருடங்களுக்குள் அத்தியவசயமான அனைத்தையும் செய்வோம் என கூறினார்.
