உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் இஞ்சி முன்பு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்பட்ட விலையில் தற்போது ஒரு கிலோகிராம் இஞ்சி ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயர்வடைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
டிட்வா சூறாவளியால் இஞ்சி சாகுபடிக்கு ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து சந்தையில் இஞ்சி விநியோகத்தின் பற்றாக்குறையே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும்.
