3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரால் கடுமையான
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வழக்கமான வினியோகத்தை பாதித்துள்ளது.இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் அரசு 98 சதவீத கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வாங்குவதால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போரால் பெட்ரோல், டீசலின் விலை அந்நாட்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது.
