Our Feeds


Saturday, March 7, 2026

Zameera

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்


 ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 


இந்த நிலநடுக்கமானது பண்டார் அப்பாஸ் நகருக்கு மேற்கே 74 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக அதன் தரவுகள் தெரிவிக்கின்றன. 


இதன்படி, கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் ஈரானில் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். 


கடந்த செவ்வாய்க்கிழமை, பார்ஸ் (Fars) மாகாணத்தின் கெராஷ் (Gerash) பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அது 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »