Our Feeds


Sunday, March 8, 2026

SHAHNI RAMEES

நிராயுதபாணிக் கப்பல் என்ற தகவலை மறுத்தது அமெரிக்கா!

 

இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் இருந்ததாக வெளியாகும் தகவல்களை அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம்  மறுத்துள்ளது.

 

குறித்த கப்பலானது ஆயுத மோதல் சட்டத்தின் கீழ் ஒரு செல்லுபடியாகும் இராணுவ இலக்காகும். எனவே, அந்தப் போர்க்கப்பலை அழிப்பதற்குப் பலத்தைப் பிரயோகிக்க அனுமதி உண்டு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதற்கமைய அந்த கப்பல் அழிக்கப்பட்டதாகவும்,  ஆயுத மோதல் சட்டங்களுக்கு இணங்க, இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இலங்கை தரப்பினால் உயிராபத்து ஏற்படாத வகையில் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுளளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »