நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரசிற்குச் சொந்தமான நிலத்தில் முறைகேடாக கட்டிடத் திட்டத்தை நிறைவேற்றி அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
