Our Feeds


Wednesday, April 1, 2026

SHAHNI RAMEES

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் தான்! - விவாதத்திற்கு நான் ரெடி

 

2019.04.29 ஆம் திகதி சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ரில்வான், சாரா ஜெஸ்மின் உட்பட அனைவரும் உயிரிழந்து விட்டார்கள். ஆகவே சாரா தொடர்பான சந்தேகங்கள் இத்துடன் முடிவடைந்து விட்டது. சாரா இந்தியாவுக்கு செல்லவில்லை. உலகை விட்டே சென்று விட்டாள்.

சமூகத்தில் தற்போதும் 300 மனித தற்கொலை குண்டுதாரிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவர்கள் நிச்சயம் மனித குண்டுகளாக வெடிப்பார்கள். இவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. யுத்தம் முடிவடைந்தவுடன் புலி போராளிகளுக்கு முறையான புனர்வாழ்வளித்ததால் தான் 2009 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பு கொள்கை மீளுருவாக்கப்படவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. மத்ரஸா பாடசாலைகள் கண்காணிக்கப்படவில்லை. சஹ்ரான் உருவாக்கிய மத்ரஸா பாடசாலைகள் இன்றும் இயங்குகின்றன. அவற்றில் கற்பிக்கும் பாடங்களும் நாட்டின் அடிப்படை சட்டத்துக்கு முரணாக உள்ளது. குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான். இவரை தவிர்த்து பிறிதொரு பிரதான சூத்திரதாரி உள்ளார் என்று குறிப்பிடுபவர்கள் என்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபடலாம். நான் தயாராகவே உள்ளேன் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »