Our Feeds


Tuesday, April 14, 2026

Zameera

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை ஆபத்தானது


 ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையானது ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என சீனாவின் வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பின்னர், நேற்று முதல் இந்த முற்றுகை அமுலுக்கு வந்தது. 

இந்த முற்றுகை பதற்றத்தை அதிகப்படுத்துவதுடன், ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் என சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் எச்சரித்துள்ளார். 

இது ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடத்தை என்று ஜியாகுன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

ஈரானிடமிருந்து அதிக அளவு மசகு எண்ணெயைப் பெறும் சீனா, இந்த மோதல் முடிவுக்கு வருவதிலும், சர்வதேச சந்தையில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »