ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மீறி செயல்படும் கப்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், சட்டவிரோதமாக நுழையும் அல்லது அமெரிக்க உத்தரவுகளை பின்பற்றாத கப்பல்கள் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படுமெனவும் கடலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒழிப்பதுபோல விதிமீறும் கப்பல்கள் “சுட்டு வீழ்த்தப்படும்” எனவும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த எச்சரிக்கையானது ஹோர்முஸ் நீரிணை பகுதியின் பாதுகாப்பு நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.
