Our Feeds


Thursday, May 7, 2026

Zameera

இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட 30 வெளிநாட்டவர்கள் கைது

இணையம் ஊடாக சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்களை இன்று (07) கைதுசெய்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் தங்கியிருந்தபோதே, கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த நபர்களிடமிருந்து 10 கணினிகள், 29 ஆப்பிள் வகை தொலைபேசிகள் மற்றும் இணைய வசதிகளைப் பெறுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

இதேபோன்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் 152 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இந்த 30 பேரும் உள்ளடங்கியிருந்தனர். 

நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிசர இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதே, அங்கிருந்து தப்பிச் சென்று மீண்டும் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »