Our Feeds


Friday, May 22, 2026

Admin

கேகாலையில் 330 மீ.மீக்கும் அதிக மழை வீழ்ச்சி!


இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கேகாலை மாவட்டத்தின் பம்பேகம பகுதியில் 336.5 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (21) காலை 8.30 மணி முதல் இன்று (22) காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் மழைவீழ்ச்சி மையங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் பம்பேகம பகுதியில் 336.5 மில்லிமீற்றர் அளவிலான அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவானது. 

கிரிந்திவெல பகுதியில் 332 மில்லிமீற்றரும், பென்ரித் தோட்டத்தில் 291.5 மில்லிமீற்றரும் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »