எரிபொருள் விலையில் இன்று (01) எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
விலை திருத்தம் குறித்த முடிவுகள் எதிர்வரும் சில நாட்களில் எட்டப்படும் என அந்த கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக எரிபொருள் விலையில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி அன்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
