Our Feeds


Monday, May 18, 2026

Zameera

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டவர் கைது


 கொள்ளுப்பிட்டி நிமல்கா கார்டன் பகுதியில் தீர்வை வரி இன்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 540 சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இவ்வாறு கைதானவர் 35 வயதுடைய சீன நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »