Our Feeds


Monday, May 18, 2026

Zameera

ஈரான் இணங்காவிட்டால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது - ட்ரம்ப்

அமைதி ஒப்பந்தத்துக்கு ஈரான் இணங்காவிட்டால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்தன.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் அனைத்து தோல்வியிலேயே முடிந்தன.

இதனால் மீண்டும் போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்கா முன்மொழியும் அமைதி ஒப்பந்தத்துக்கு ஈரான் சம்மதம் தெரிவிக்காவிட்டால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (17) தெரிவித்துள்ளார்.

“ஈரானைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் வேகமாகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது. நேரம் மிகவும் முக்கியமானது” என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »