ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பான நீதித்துறை விசாரணை இன்று (22) மீண்டும் தொடங்கியது.
கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன.
நான்கு பேரிடமிருந்து சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன.
மேலதிக சாட்சிகளின் விசாரணை இம்மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
