அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமை தேரர்,
பல்லேகம ஹேமரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.அஷ்டமஸ்தானாதிபதி தேரரின் கைது தொடர்பான விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் அறிக்கைப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பல்லேகம ஹேமரதன தேரர், சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகளை நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து, சந்தேக நபரான தேரர் மற்றும் சிறுமியின் தாயாரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிது விக்ரமரத்ன, சந்தேக நபரான தேரருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது பல்லேகம ஹேமரதன தேரர் உட்பட மூவர் இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
