நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களுக்கு உட்பட்ட 8 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள தகவலின்படி, பின்வரும் மாவட்டங்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன:
பதுளை
குருணாகல்
மாத்தளை
மொனராகலை
இரத்தினபுரி
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவதானமாக இருக்குமாறும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
