Our Feeds


Sunday, May 10, 2026

Zameera

ஹேக்கர்களின் தாக்குதல்கள் எதிர்காலத்திலும் தொடரலாம் : இது இந்தத் துறையின் இயல்பு - வசந்த சமரசிங்க


 உலகம் முழுவதும் சைபர் தாக்குதல்கள் மற்றும் ஹேக்கர்கள் மூலம் பல்வேறு மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் உலகின் முதல் சந்தர்ப்பம் அல்ல எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



இன்று (09) ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து அதிகளவில் கலந்துரையாடி வருவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து அமைச்சுகள் சார்பாகவும் இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.



“இந்த ஹேக்கர்களின் தாக்குதல்கள் எதிர்காலத்திலும் தொடரலாம். இது இந்தத் துறையின் இயல்பு. நாம் உரிய பாதுகாப்பைப் பேணி, அவதானத்துடன் இந்த கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்க வேண்டும்” என அமைச்சர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »