Our Feeds


Wednesday, June 10, 2026

Zameera

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 3 வாரத்திற்கு முன் சுரேஸ் சலே செய்த செயல்


 ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு 5 பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் தெரிவித்தார்.


அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார் என்றும் குண்டுத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியுள்ளார் என்றும் இந்த விடயங்கள் அனைத்தும் தீவிரமான விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »