இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shiran Basik) என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து தப்பியோடி வெளிநாடு ஒன்றில் மறைந்திருக்கும் ஷிரான் பாசிக்கை, இராஜதந்திர மட்டத்தில் இலங்கையும் அமெரிக்காவும் கோரியுள்ளதாகத் தகவல்கள் பதிவாகியுள்ளதாக குற்றவியல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
‘அத தெரண’வின் 'Big Focus' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
