அம்பாறை டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை
போக்குவரத்துச் சபை (SLTB) பஸ் ஒன்று இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் வெல்லம்பிட்டியவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இந்த பஸ், பாதையை விட்டு விலகி வெல்லம்பிட்டிய, அம்பகஹ சந்தி பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தினால் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
