Our Feeds


Wednesday, June 24, 2026

SHAHNI RAMEES

கிராம உத்தியோகத்தர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

 


கிராம உத்தியோகத்தர்கள் இன்று (24) முதல்

அனைத்து வகையான களப்பணிகளில்  இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


 


இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.


 


பல வருடங்களாக கிராம உத்தியோகத்தர்கள் கோரி வரும் பயணச் செலவுகளுக்கான போதிய எரிபொருள் கொடுப்பனவை வழங்குவது உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


 


கிராம உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »