Our Feeds


Wednesday, June 10, 2026

SHAHNI RAMEES

சித்திரவதை செய்யப்பட்டுள்ளதா? - சுரேஷ் சலேயின் நிலையை பரிசோதிக்க மருத்துவ குழு நியமனம்!

 

தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா எனப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட விசேட மனநல தடயவியல் மருத்துவ குழுமமொன்றை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நியமித்துள்ளது.

 

கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மருத்துவ பரிசோதனையை தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளுமாறும் அங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, அந்த மருத்துவ அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »