உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் எல் நினோ விளைவுகள் தொடங்கிவிட்டதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக இந்த எல் நினோ தொடங்கியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்றப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த காற்றானது பசிபிக் பெருங்கடல் பக்கம் அதிகமாக வீசுவதால் இந்த பகுதியில் வெப்பம் கடுமையாக அதிகரித்திருப்பதே, எல் நினோ விளைவு தொடங்கியதற்கான அறிகுறியாகக் கருதப்படுகின்றது என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
