ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நேற்று (03) நிறைவேற்றியுள்ளது.
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நேற்று நிறைவேற்றியிருப்பது ஜனாதிபதி ட்ரம்ப்புக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்ததன் மூலம் ஜனாதிபதி ட்ரம்ப் அரசியலமைப்பை மீறியதாக பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
ட்ரம்பின் பெரும்பான்மை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இந்த மசோதாவை ஆதரித்தனர்.
போர் அதிகாரச் சட்டத்தின்படி, அமெரிக்கப் படைகளைப் போரில் ஈடுபடுத்திய பிறகு, ஜனாதிபதி ட்ரம்ப், பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற 60 நாள்கள் அவகாசம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
அந்தக் காலக்கெடு பல வாரங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டதாகக் கூறி ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகளின் செனட் சபை நிறைவேற்றியது.
ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்ததைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் 215 – 208 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேறியது.
இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாக அமுலுக்கு வர அமெரிக்கச் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதி ட்ரம்ப் தனது சிறப்பு வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
அதனை முறியடிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதால், உடனடியாகப் போர் நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
