பாணந்துறை, குருப்புமுல்ல பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று, 9 மில்லிமீட்டர் ரக 09 தோட்டாக்கள் மற்றும் டி-56 ரக 49 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றினால் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த துப்பாக்கியும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், அவரிடமிருந்து 04 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருளை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, குருப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
பாணந்துறை தெற்கு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Saturday, June 6, 2026
துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
