"Rebuilding Sri Lanka" நிதியத்திற்கு கிடைத்த எந்தவொரு
பணமும் இதுவரையில் செலவிடப்படவில்லை என சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் ஈ. எம். எஸ். ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதே இந்த விபரம் வெளிவந்துள்ளது.
குறித்த நிதியம் தொடர்பாக நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஈ. எம். எஸ். ஏக்கநாயக்க இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
