கொழும்பு - பொரளை மெகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 5 பேருக்கு இடையே வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த இரு கைதிகள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
