Our Feeds


Saturday, July 11, 2026

Zameera

டெங்கு மரணங்கள் 47 ஆக உயர்வு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 


அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 67,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஜூலை மாதத்தின் முதல் 09 நாட்களில் மட்டும் 10,685 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நேற்று (10) ஒரே நாளில் மட்டும் சுமார் 1,110 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார். 


தற்போது பல முக்கிய வைத்தியசாலைகளின் கொள்ளளவு அதன் உச்சத்தை எட்டியுள்ளதால், வைத்தியசாலைகளில் கடும் நெருக்கடி மற்றும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »