இந்த எச்சரிக்கை கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களுக்கு பொருந்தும்.
மனித உடல் உணரும் வெப்பநிலையைக் குறிக்கும் வெப்பக் குறியீடு சில பகுதிகளில் எச்சரிக்கை நிலையை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.