(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி உயிரிழந்த 7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 கைதிகளுக்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சபையில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் இன்று காலை சிறைசாலை அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இவ்வாறான நிலை ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன அவர் தெரிவித்தார்.
