அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் இரகசிய கடவுச்சொற்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
