Our Feeds


Wednesday, July 15, 2026

SHAHNI RAMEES

ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதத்தை கையளித்த மத்திய மாகாண ஆளுநர்!

 


மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன்

தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.


சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட இந்த இராஜினாமா கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும், இந்த இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்றும் பேராசிரியர் சரத் அபேகோன் 'அத தெரண' செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.


அத்துடன், தான் பதவியிலிருந்து விலகுவதற்கு எடுத்த முடிவு முற்றிலும் தனிப்பட்ட காரணம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


பேராசிரியர் சரத் அபேகோன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாக காணப்படுகின்றது. இப்பதவியில் இருந்த மஞ்சுளா மடஹபொல அண்மையில் ஓய்வு பெற்றமையே இதற்கு காரணமாகும்.



அந்தப் பதவியின் தற்காலிகப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »