Our Feeds


Friday, July 3, 2026

Zameera

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு


 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்‌ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (3) நிராகரித்துள்ளது.


இந்தக் குற்றச்சாட்டை சவாலுக்கு உட்படுத்தி யோஷித ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை பரிசீலித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.


அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »