இதில் இருப்பவர்களில் ஐவர் ஏற்கனவே இருந்த
அரசாங்களில் அமைச்சு பொறுப்புகளில் இருந்தவர்கள்.அதுவும் மீள் குடியேற்றம், நீதி அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு, கிராமப்புற பொருளாதார அபிவிருத்தி போன்ற அமைச்சுகளே அவை.
அன்று இவர்கள் என்ன செய்தார்கள்?
இன்று தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்ட கட்சி NPP, என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த நிலைக்கு கடந்த காலத்தில் இந்த தமிழ் பேசும் கட்சிகளின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம்.
அரசு எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் அனைவரோடும் இணைய முடியாது.
NPPயை எதிர்க்க NPPஐ விட சிறந்த ஒரு இடத்தை நோக்கியே செல்ல வேண்டும்.
எதிர்கட்சி அரசியல் என்பது அர்த்தமற்ற கூட்டுகளால் உருவாக முடியாது.
இதில் இருக்கும் கட்சிகளே கொள்கை ரீதியாக முரண்களின் கூட்டு என்பதே உண்மை.
சமூக செயல்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் பேஸ்புக் பதிவு
