Our Feeds


Friday, July 31, 2026

SHAHNI RAMEES

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: தேசிய பாதுகாப்பை கருதி சாட்சிய விவரங்களை வெளியிடத் தடை

 


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்

சம்பவம் தொடர்பாக, சம்பவம் நிகழ்ந்தபோது கடமையில் இருந்த பிரதம சிறைச்சாலை அதிகாரி வழங்கிய சாட்சியத்தில் தேசிய பாதுகாப்பை பாதிக்கக்கூடிய மிகுந்த உணர்வுபூர்வமான தகவல்கள் உள்ளதாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து, அந்தச் சாட்சியத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை எந்தவொரு ஊடகமும் வெளியிடக் கூடாது என நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.


மேலும், குறித்த சாட்சிப் பதிவை பாதுகாப்பாக நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்குமாறும், நீதிமன்றப் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பான விசாரணையின் போது, சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறைச்சாலை அதிகாரியாக பணியாற்றிய விக்ரம ஜயந்த குமார நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.


இதற்கிடையில், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட 89 சிறைச்சாலை காவல் அதிகாரிகள் தொடர்பான விவரங்களும், கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையும் சிறைச்சாலை திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »