Our Feeds


Sunday, July 26, 2026

ShortNews

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!


வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டின் ஊடாக நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »