ஆளும் கட்சியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலிப்பதற்காக நாளை (01) அழைக்குமாறு உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
இம்மனுக்களை விசாரணை செய்வதற்காகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவினால் ஐந்து பேரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமொன்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த நீதியரசர்கள் குழாமின் தலைவராகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன செயற்படுவார்.
அசல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் இந்த நீதியரசர்கள் குழாத்தின் ஏனைய உறுப்பினர்களாவர்.
Monday, August 31, 2026
22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் தொடர்பான பரிசீலனை நாளை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
