25 வெண்பலகைகள் வழங்கி முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு!
நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் 2014 ஆம் ஆண்டு சாதாரண தரப் பிரிவு பழைய மாணவர்களால், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25 வெண்பலகைகள் (Whiteboards) இன்று (16) பாடசாலை வளாகத்தில் கையளிக்கப்பட்டன.
தற்போது வகுப்பறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் கரும்பலகைகளுக்குப் பதிலாக, மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் இலகுவாகவும் நவீன முறையிலும் முன்னெடுக்கும் வகையில் இந்த வெண்பலகைகள் வழங்கப்பட்டுள்ளன.
வெண்பலகைகள் பாடசாலையின் அதிபர் திரு. நடராஜா நவரட்னம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள், மாணவ–மாணவிகள், பிரதி அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பழைய மாணவர்களின் இந்தப் பங்களிப்பு, பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதற்கும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
பாடசாலையின் வளர்ச்சிக்கு பழைய மாணவர்களின் பங்களிப்பு தொடர வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.
