மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (3) அதிகாலை தன்னிச்சை திறந்துள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை தொடருமானால், எஞ்சிய வான் கதவுகளும் தன்னிச்சையாக திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அனரத்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, குறித்த பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சென். கிளேயர் மற்றும் டெவோன் ஆகிய நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
