அமெரிக்க – ஈரானிய போர் காரணமாக இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 117 கோடி அமெரிக்க டொலர்களால் (சுமார் 39,250 கோடி இலங்கை ரூபாய்) அதிகரித்துள்ளதாகவும், இது சதவீத அடிப்படையில் 58.8% உயர்வு என்றும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்தத் தரவு அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை எரிபொருள் இறக்குமதிக்காக 316.8 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் 106,021 கோடி இலங்கை ரூபாய்) செலவிட்டுள்ளது.
அதில் எரிபொருள் இறக்குமதிக்காக அதிகபட்சத் தொகை கடந்த ஏப்ரல் மாதத்தில் செலவிடப்பட்டதுடன், அம்மாத்தில் மட்டும் 88.6 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் 29,654 கோடி இலங்கை ரூபாய்) இலங்கை இறக்குமதிக்காகச் செலவிட்டுள்ளது.இலங்கை அரசியல்
