Our Feeds


Thursday, August 6, 2026

SHAHNI RAMEES

சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!


பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்

சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் இருந்து உரையாற்றிய ஊடகச் சந்திப்பில் சாகிப் அல் ஹசன் இணையவழி மூலம் பங்கேற்ற சில மணிநேரங்களிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகுரா நகரிலுள்ள கேஷப்மோ அமைந்திருக்கும் அவரது பாரம்பரிய வீட்டின் மீது இரவு 8.45 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காவல்துறையினரும் உள்ளூர் தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.


அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கற்களை வீசிச் சேதப்படுத்தியதுடன், தீ வைப்பதற்கும் முயற்சித்துள்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வீட்டின் தெற்குப் பக்க இரும்பு வாயிலின் மேல் பகுதியில் பெற்றோல் குண்டு வீசப்பட்டதாகவும், பல ஜன்னல்கள் உடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாக்குதலைத் தொடர்ந்து, அவரது வீட்டிற்கு வெளியே பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »