Our Feeds


Monday, August 31, 2026

ShortNews

துறைமுகத்தில் சிக்கிய போதைப்பொருள் - தொழிலதிபர் கைது!


கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொள்கலனிலிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானில் இருந்து இந்தப் போதைப்பொருள் தொகை இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »