Our Feeds


Sunday, August 30, 2026

Zameera

சட்டவிரோத மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது


 சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மாத்திரைத் தொகுதியைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


நேற்று (29) கடற்படையும் பொலிஸாரும் இணைந்து அநுராதபுரம் மாத்தளை சந்திப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


வடமத்திய கடற்படை கட்டளையின் 'இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய' நிறுவனத்திற்குக் கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, அநுராதபுரம் பொலிஸாருடன் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகத் தம்வசம் வைத்திருந்த 400 மாத்திரைகளுடன் 25 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 


இந்தக் கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் மாத்திரைத் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »